ரூ. 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு – முதல்வர் பழனிசாமி பெருமிதம்

Default Image

3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றுடன் முடிவடைந்தது. நிறைவு விழாவில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டார். இதன் மூலம் 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த முறை நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை விட இந்த முறை 1 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அடுத்த முதலீட்டாளர்கள் மாநாடு 2021-ம் ஆண்டு நடைபெறும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்