கஜா புயல் பாதிப்பு: 70 சதவிகித விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது….!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 70 சதவிகித விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் துறை சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

70 சதவிகிதத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் 15 நாட்களுக்குள் முழுமையாக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விடும் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்