தமிழக சட்டமன்றத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 21ஆக மாற்றியமைக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்
பாலகிருஷ்ண ரெட்டியின் தகுதிநீக்கத்தை தேர்தல் ஆணையத்துக்கு உடனே அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பாலகிருஷ்ண ரெட்டியின் தகுதிநீக்கத்தை தேர்தல் ஆணையத்துக்கு உடனே அறிவிக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 21ஆக மாற்றியமைக்க வேண்டும்.
அதேபோல் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என்பது மட்டுமே உண்மை. விளம்பரம் செய்து அரசின் பணத்தை வீணடித்தது தான் மாநாட்டின் முக்கிய சாதனை.
முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் உல்லாசப் பயணம் சென்றுள்ளனர்.அந்நிய முதலீடுகள் குறைந்து, முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வர முடியவில்லை .நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79% மட்டுமே.முதல் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதத்தைக்கூட அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.