‘எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு வாக்களிப்பது மட்டுமே’ – தனது அரசியல் நிலைபாட்டை அறிக்கை மூலம் தெரிவித்த அஜித்!!

Default Image

அஜித் ரசிகர்கள் என சிலர் பா.ஜ.கவில் இணைந்ததும், அதன் பிறகு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியதும், தமிழக அரசியல் வட்டாரத்அதிலும், அஜித் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தற்போது இது குறித்து அஜித் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை அஜித் தனது பி.ஆர்.ஓ மூலம் வெளியிட்டுள்ளார். அநத் அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘எனது  படத்தில் கூட அரசியல் சம்ப்ந்தமாக எந்த ஒரு காட்சியையும் வைக்கூடாது என தெளிவாக இருக்கிறேன். என்னுடைய வேலை சினிமாவில் நடிப்பது மட்டுமே. எனது ரசிகர்களின் மன்றங்களின் மீதோ, இயக்கங்களின் மீதோ எந்த வித விதமான அரசியல் சாயமும் பூசிவிடக்கூடாது என்பதற்காகவும், எனது ரசிகர்களின் நலனுக்காகவும், மட்டுமே ரசிகர் மன்றங்களை கலைத்தேன்’

மேலும், ‘ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனது உட்சபட்ச அரசியல் ஈடுபாடு வாக்களிப்பது மட்டுமே. நான் சினிமாவில் நடிக்க மட்டுமே வந்துள்ளேன். அரசியலில் ஈடுபடவோ, யாருடனும் மோதவோ நான் வரவில்லை.. அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு ஆனால் அதனை மற்றவர்கள் மீது திணிக்க மாட்டேன். எனது ரசிகர்களிடம் கூறுவது ஒன்று மட்டுமே, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும், மற்ற தொழில் பார்ப்பவர்கள் அவரவர் குடும்பத்தை நன்றாக கவனிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை மதித்து நடக்க வேண்டும். ஆரோக்யத்தை பேண வேண்டும். ‘

DINASUVADU

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்