ஜெயலலிதா மரணம் :ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்

  • ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்
  • சம்மன் அனுப்பியும் ஆஜராகாத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 
  • இன்று ஒருவழியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்மன் அனுப்பியும் ஆஜராகாத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:

அதேபோல்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு டிசம்பர் 18 ஆம் தேதி , ஜனவரி  7 ஆம்  தேதிகளில் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.ஆனால்  2 முறையும் அவர் ஆஜராகவில்லை.மேலும்  3-வது முறையும் அவர் ஆஜராகவில்லை.

இன்று ஒருவழியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்: 

இந்நிலையில்  ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.

Leave a Comment