பயங்கரமாக மற்றவர்களை பயமுறுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி – தமிழக பாஜக தலைவர் தமிழிசை

Default Image

பயங்கரமாக மற்றவர்களை பயமுறுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  கூறுகையில்,பயங்கரமாக மற்றவர்களை பயமுறுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி .ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை.

தமிழகத்தில் இருந்து சென்ற ஸ்டாலின் தமிழை தவிர வேறு மொழியை கற்க மாட்டேன் என்று சொன்னவர். அவரை பெங்காலி மொழியை பேச வைத்து உள்ளார் மோடி. பெரியாரை பற்றி பேசியவர் விவேகானந்தர் பற்றி பேசியுள்ளார்

மாநில சுயாட்சி பற்றி பேசி ஸ்டாலின் ஒன்றுப்பட்ட இந்தியா என்று பேச வைத்தது தான் மோடியின் சாதனையாகும். ஒன்றுப்பட்ட இந்தியாவை கொண்டு வருவதாக கூறும் மகா கூட்டணி உருப்பெறமுடியாத கூட்டணியாகும். இந்த கூட்டணி கருவிலேயே கலைய உள்ளது. மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு தான் அதிக திட்டங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் பாஜக காலை மட்டுமல்ல, வேரையும் ஊன்றும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்