மதுரையிலேயே செட்டில் ஆகி விட்டாரா வைகை புயல் வடிவேலு!!?
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இவரது காமெடி இல்லாத படங்கள் இல்லை என சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் வைகைபப்புயல் வடிவேலு. இவரது காமெடிக்காக மட்டுமே பல படங்கள் ஹிட்டாகி உள்ளன.
அப்படி இருந்த அவர் திடீரென அரசியலில் களமிறங்கியதாலும், அந்த சமயத்தை மற்ற காமெடி நடிகர்கள் நன்றாக உபயோக படுத்தியதாலும் இவருக்கு சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் இல்லாமல் போனது.
இவர் நடிக்க இருந்த இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படம் கூட பல பிரச்சனைகளால் தடைபட்டதால் இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல், தனது சொந்த ஊரான மதுரையிலேயே செட்டில் ஆகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வபோது எதேனும் ஷூட்டிங் இருந்தால் மட்டுமே சென்னைக்கு வருகிறாராம்.
DINASUVADU