தை தமிழ் மாத ராசிபலன் : சாதிப்பைதையே குறிக்கோளாக கொண்டிருக்கும்..! சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..??
தை தமிழ் மாத ராசிபலன் ” சாதிப்பைதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு ” எப்படி இருக்கிறது.
உங்கள் ராசியில் யோகாதிபதிகளான செவ்வாய், சூரியன் நல்ல நிலையில் இருகிறார்கள் அதனால் குருவும், செவ்வாயும் பரிவர்த்தனை யோக அமைப்பில் இருப்பது யோகம் தான் என்பதால் இந்த தை மாதத்தில் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
அற்புதமான அமைப்பில் கிரகங்கள் இருந்தாலும் கடக ராசிக்காரர்கள் ஒருமுறை ராகு பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கொடுமுடி ஆகிய புனிதத் தலங்களுக்கு சென்று ராகு பகவானுக்கு உரிய பரிகாரங்களை செய்வது மிகவும் நல்லது.
அதுமட்டுமல்லாமல் இன்னும் சில வாரங்களில் ராகு கேதுப் பெயர்ச்சி வருகிறது.அது உங்களுக்கு நல்ல யோகத்தை தான் தர போகிறது அதற்கு முன் இதை செய்தால் இன்னும் விஷேசம் தான்.
மேலும் குருவின் பார்வை ராசியில் வலுவாக இருப்பதால் எந்த வித கேட்ட பலன்கள் எதுவும் இந்த மாதம் உங்களுக்கு வர வாய்ப்பில்லை.அரசு, தனியார்துறை பணிபுரியும் கடக ராசி அன்பர்கள் இம்மாதத்தில் நன்மைகளை பெறுவார்கள் மற்றும் கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் இம்மாதத்தில் உண்டு.
ராசிநாதனின் நண்பர்களான சூரியன் மற்றும் செவ்வாய் என்ற இரு கிரகங்களும் சுபத்தன்மை பெற்றி ராசியில் இருப்பதால் இதுவரைக்கும் உங்களை எதிர்த்தவர்கள் மனம் மாறி உங்கள் கருத்துகளை ஆதரிப்பார்கள்.
உங்களுக்கு தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் இம்மாதம் தீரப் போகின்றது.புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.பல புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.
மேலும் சுக்கிரனால் உங்களுக்கு பெண்கள் வழியில் எரிச்சலையும், அவர்கள் மூலமாக எதிர்மறையான பலன்கள் மற்றும் செலவுகளையும் தருவார் ஆகையால் இம்மாதம் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாக யோசித்து செய்வது மிகவும் நல்லது.
மொத்தத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் உங்களுக்கும் அப்படி தான் இம்மாதம் அமைய போகிறது.