அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் உட்பட 40பேர் காயம்

Default Image

அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது. மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்றது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1400காளைகள் சீறிப்பாய, 848மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர். 7ஏஎஸ்பிக்கள், 15டிஎஸ்பிக்கள் உட்பட 1500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் உட்பட 40பேர் காயம் அடைந்துள்ளனர்.  படுகாயமடைந்த 15பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்