உலக கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் சீருடைக்கு ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்…!

உலக கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அணிந்திருந்த 10 என்ற எண் சீருடைக்கு ஓய்வளிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விளையாடி பல்வேறு சாதனைகளைப் படைத்த கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 10 என்ற எண் கொண்ட சீருடையை அணிந்திருந்தார். அவர் ஓய்வுக்குப் பின், ஷர்துல் தாக்கூர் எனும் கிரிக்கெட் வீரர் 10 என்ற எண் கொண்ட சீருடையை அணிந்ததற்கு சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, 10 என்ற எண் உடைய சீருடையை வீரர்கள் அணிய தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. எனவே, பி.சி.சி.ஐ. நிர்வாகம் 10 என்ற எண் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்கு ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ளதாகவும், ஆனால் அது நடைமுறை சாத்தியம் இல்லாததால் வீரர்கள் யாரும் அதை அணிய வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment