அனைத்து தரப்பினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் : ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன்

அனைத்து தரப்பினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என ஜல்லிக்கட்டு குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தெரிவித்துள்ளார்.

அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டியில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கலந்து கொள்வதாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராகவனை தேர்தெடுத்தார்.

இதனையடுத்து அவர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து அவனியாபுர ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment