புதிதாக 100 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்க அரசு திட்டம்…!அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறைக்கு புதிதாக 100 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  தமிழக சுகாதாரத்துறைக்கு புதிதாக 100 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.தனியார் ஆம்புலன்ஸ் சேவையை நெறிபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொங்கலுக்கு பின் 1884 மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். 2345 செவிலியர்களும் தேர்வு மூலம் விரைவில் பணி அமர்த்தப்படவுள்ளனர் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment