மே மாதத்தில் உள்ளாட்சித்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும்…..!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

மே மாதத்தில் உள்ளாட்சித்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,  உள்ளாட்சித் தேர்தலில் இனிமேல் எந்த ஒரு தாமதமும் இருக்காது. மே மாதத்தில் உள்ளாட்சித்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும். உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனதற்கு காரணம் என்ன என்று அனைவரும் அறிவர் திமுக வழக்கு போட்டதுதான்.

மும்பையில் இந்தி தெரியவில்லை என்று தமிழர் அவமதிப்பு என்பது உண்மையெனில் அமைச்சகத்திடம் தெரிவிப்போம் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment