இவருக்கு யார் கூட்டணி குறித்து பேசுவதற்கு அதிகாரம் கொடுத்தார்கள்..!தம்பிதுறை மீது பொன்னர் தாக்கு..!!

அதிமுகவிந் கூட்டணி குறித்து பேசுவதற்கு யார் தம்பித்துரைக்கு அதிகாரம் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  தாக்கி விமர்சித்துள்ளார்.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்துப் பேசியது கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் கூட்டணி குறித்து அதிமுகவில் முடிவெடுக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது அக்கட்சியின் எம்பி தம்பித்துறையை விமர்சித்து தாக்கியுள்ளதுவாறு தெரிகிறது.

 

author avatar
kavitha

Leave a Comment