திமுக அதிமுகவை பார்த்து மிரளுகிறது..!ஸ்டாலின் குறித்து அன்றே பெரியார் சொன்னார்..!டிடிவி படார் பதில்..!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின்  அதிமுவை பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..? டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய டிடிவி தினகரன் பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் அரா மீனைப் போல, தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ்; தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கு பி.ஜே.பி என வேஷமிடும் அரா மீன் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்? தேர்தலுக்காக கூட்டணிக்கு காங்கிரஸ் மற்றும்  பாஜக என வேஷமிடுபவர் தான் ஸ்டாலின்.

மக்களை காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்பாதே என்றார் பெரியார் அவனது இன்றைய நிலையை பார்,அவன் தியாகியா அல்லது தகுதியை தாண்டிய செல்வந்தனா என்பது புரியும் என்றார்.  55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் சொன்னது மு.க.ஸ்டாலினை பற்றிதான் போலும் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment