திமுக தலைவர் ஸ்டாலின் அமமுகவை பார்த்து பயந்து பதுங்குவது ஏன்? தினகரன்

55 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னது மு.க.ஸ்டாலினை பற்றிதான் போலும் என்று அமமுக துணைப்பொதுச்செயலார்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமமுக துணைப்பொதுச்செயலார்  டிடிவி தினகரன் கூறுகையில், மக்களை காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் நம்பாதே என்றார் பெரியார். அவனது இன்றைய நிலையை பார்,அவன் தியாகியா அல்லது தகுதியை தாண்டிய செல்வந்தனா என்பது புரியும் என்றார். 55 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னது மு.க.ஸ்டாலினை பற்றிதான் போலும்.

திமுக தலைவர் ஸ்டாலின் அமமுகவை பார்த்து பயந்து பதுங்குவது ஏன்? தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ். தேர்தலுக்கான கூட்டணிக்கு பாஜக என வேஷமிடுபவர் ஸ்டாலின் என்று அமமுக துணைப்பொதுச்செயலார்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment