தேர்தல் குறித்து கண்டனம் தெரிவித்த கேப்டன் விஜயகாந்த்….!!!
தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவும், கேள்விக்குறியாகவும் மாறியிருப்பது கண்டனத்திற்குரியது என விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சற்று தேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவும், கேள்விக்குறியாகவும் மாறியிருப்பது கண்டனத்திற்குரியது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் என்றும் கேட்கவில்லை, வேண்டாம் என்றும் சொல்லவில்லை என விஜயகாந்த் கூறியுள்ளார். புயல் பாதிப்பை அறியாமல் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்ததை மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளார்.