ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி வீட்டில் கல்வீச்சு….!!! தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

Default Image

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்த செல்வா சுந்தர் என்பவர் இந்து மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளராக உள்ளார். இவர் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி மனு அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவருக்கு அலைபேசி மூலம் கொலைமிரட்டல் வந்துள்ளது.

கல்வீசி தாக்குதல் :

இதனையடுத்து, செல்வசுந்தர் இதுகுறித்து எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கீழ் அலங்காரத்தட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரது ஜன்னல் கண்ணாடி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்