தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை…3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!

ஜம்மு காஷ்மீர் ஜின்பன்சில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் புத்காம் மாவட்டம் ஜின்பன்சல் ,  சாரி ஷாரீப் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சொல்லப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் அதிரடி படை வீரர்கள், போலீசார் , மத்திய ரிசர்வ் படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டார்கள்.

அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் தீடிரென துப்பாக்கிச்சூடு தாக்குதலில்   ஈடுபட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரும் பதில்  தாக்குதலில் ஈடுபட்டனர். மணிக்கணக்கில் நடைபெற்ற இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர்   சுட்டுக்கொல்லபட்டனர்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment