உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு : அமைச்சர் சம்பத்….!!

Default Image

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு, உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய நிலவரப்படி 250 நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பதிவு செய்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். தென்கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து, உள்ளிட்ட நாடுகள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் சம்பத்தை சந்தித்தை, பிரேசில் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, கிராமப்புற பகுதிகளை வளர்ச்சியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் தொழில் நிறுவனம் அமைப்பதற்கான ஒப்புதலை பெற்றது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்