எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தனர்  …!துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வம்

கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர்  என்று துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Image result for பன்னீர் செல்வம்

இது தொடர்பாக  துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வம் கூறுகையில்,  கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அயராது உழைத்த கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை .சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் மற்றும் சமூக நீதிக்காக போராடியவர் கருணாநிதி. பல பதவிகளை வகித்த கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும், கருணாநிதி மீது கருத்து வேறுபாடு இருந்தாலும், கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தனர்  என்று துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment