ஆர்.கே நகர் வேட்பாளரை அறிவிக்க தாமதம் காட்டும் அதிமுக : நாளை மறுநாள் அறிவிப்பு
ஆர்.கே நகர் இடைதேர்தல் களம் சூடுபிக்க தொடங்கிவிட்டது. ஏற்கனவே திமுக தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. ஏற்கனவே அறிவித்த வேட்பாளரையே அறிமுகபடுத்திவிட்டது. ஆனால் அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளரை முன்னிறுத்த கட்சிக்குள் இழுபறியாக உள்ளது.
வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் கூடம் இன்று ராயல்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இபிஎஸ், ஓபிஎஸ் என கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இருப்பினும் இன்னும் முடிவு செய்யாமல் நாளை மறுநாள் தான் வேட்பாளரை அறிவிப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.