திருவாரூர் இடைத்தேர்தல் : வாகன சோதனையில் காவல்துறையினர் தீவிரம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து, காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, திருவாரூர் தொகுதி முழுவதும் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தொகுதி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி வருகின்றனர். இதையடுத்து, நன்னிலம் காவல்துறையினர் கங்களாஞ்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment