திருவாரூர் இடைத்தேர்தல்: போட்டியிடுவது நானா, துரைமுருகனா, டி.ஆர்.பாலுவா என 4 ஆம் தேதி தெரியும் …!மு.க.ஸ்டாலின்

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது நானா, துரைமுருகனா, டி.ஆர்.பாலுவா என 4ம் தேதி மாலை தெரியும்  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறுகையில்,திருவாரூர் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் வரும் 4-ம் தேதி மாலை அறிவிக்கப்படுவார்.சட்டப்பேரவையில் என்னென்ன அம்சங்களைப் பேச வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது . திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது நானா, துரைமுருகனா, டி.ஆர்.பாலுவா என 4ம் தேதி மாலை தெரியும்.திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் சூட்சமம் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment