ஜெ.ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற பொது மக்கள் எதிர்ப்பு…!!!
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக்குவது குறித்து, கருத்து கேட்புக் கூட்டத்தை சென்னையில் ஆட்சியர் நடத்தினார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் போயஸ் தோட்ட சாலை அகலமில்லாமல் இருப்பதால் தங்களுக்கு சிரமம் ஏற்படும் என்று கூறி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.