சென்னை ஐஐடி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை……!!

Default Image

சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதத்தில் இது 3-வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்கண்டை சேர்ந்த ரஞ்சனா குமாரி என்னும் மாணவி சென்னை ஐஐடியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் ரஞ்சனாவின் விடுதி அறையின் கதவு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற ஊழியர்கள், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி அதிதி சிம்ஹா என்ற பேராசிரியை தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக செப்டம்பர் 22-ம் தேதி சாஹல் கொர்மாத் என்ற பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 4 ஆண்டுகளில் சென்னை ஐஐடி வளாகத்தில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்