பகுதிவாரியாக ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது …! தென்னக ரயில்வே அறிவிப்பு
பகுதிவாரியாக ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது .திருச்சி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது .
செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் வரும் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விருதுநகர் – மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை – பழனி பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மதுரை – கூடல்நகர் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில் வரும் 3-ம் தேதி ராமேஸ்வரம் – மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 5-ம் தேதி மதுரை – ராமேஸ்வரம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 5-ம் தேதி மதுரை – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.