புத்தாண்டு கொண்டாட்டம்:தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்கள்…!அமைச்சர் விஜயபாஸ்கர்
விராலிமலையில் ஜனவரி 20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,தமிழகத்தில் இந்தாண்டும் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும், சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.புதுக்கோட்டை விராலிமலையில் ஜனவரி 20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் .புத்தாண்டு கொண்டாட்ட முன்னெச்சரிக்கையாக 936 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ்கள், 41 இருசக்கர வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.