ஜெ.மரணம்: அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு…! தமிழக பாஜக தலைவர் தமிழிசை
அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுங்கயில், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்ற அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் .அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. வெளிநாட்டுக்கு கொண்டு சென்று ஆஞ்சியோ செய்திருந்தால் சில அரசியல் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருக்க முடியுமோ என்னவோ?…திருவாரூரில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை வாக்குகளாக அளிப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.