எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா…!
எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்திய ஊழியர்களிடம் விசாரணை நடத்த ஐவர் குழுவை தமிழக அரசு நியமித்தது.
இந்நிலையில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. வீடு கட்டுவதற்கான அரசாணையையும் மதுரையில் நேரில் சந்தித்து வழங்கினார் விருதுநகர் ஆட்சியர் சிவஞானம். அதேபோல் தமிழக அரசின் நிதியுதவியை பெற வசதியாக புதிதாக தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகமும் தரப்பட்டது.