வெற்றிக்கு பக்கத்தில் இந்திய அணி …!விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா…!

Default Image

4 -ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  ஆஸ்திரேலியா அணி  258 ரன்கள் அடித்துள்ளது
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு சுருண்டது.
292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதனைதொடர்ந்து, 399 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை விளையாடியது.

இந்நிலையில் 4 -ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  ஆஸ்திரேலியா அணி 85 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 258 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் கம்மின்ஸ் 61*,லயன் 6 * ரன்களுடன் உள்ளனர்.  அதேபோல் இந்திய அணி வெற்றிபெற 2 விக்கெட்டுகள் மட்டும் தேவைப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்