வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும்… சி-வோட்டர் கருத்து கணிப்பு…!!
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் குறித்து சி-வோட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. அதன்படி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ்வாதியும் தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் பா.ஜ.கவுக்கு கிடைக்க கூடிய இடம் 247ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் தென்னிந்தியாவில் மொத்தமுள்ள 129 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெறும் 15 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.