கூவத்தூரில் முட்டிப் போட்டு சி.எம் ஆனவர் நீங்கள்…!தில் இருந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்க …! முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சவால்
கூவத்தூரில் முட்டிப் போட்டு சி.எம் ஆனவர் நீங்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மாற்று கட்சியில் இருந்து திமுகவில் இணையும் விழா கரூரில் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், நீங்களும்,நானும் ஒரே நாளில்தான் அமைச்சரானோம். கூவத்தூரில் முட்டிப் போட்டு சி.எம் ஆனவர் நீங்கள். தில் இருந்தால்,நாளையே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு,தேர்தலை சந்தியுங்கள். அப்போது ஜெயித்து நீங்கள் முதல்வரானால்,நான் அரசியலை விட்டு போய்விடுகிறேன் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.