இயக்குனர் தனுஷின் இரண்டாவது பிரமாண்ட திரைப்படம் ட்ராப்?!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி, பாலிவுட் , ஹாலிவுட் என தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது, பாடுவது, தயாரிப்பது என பல விதமாக திரைத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
மேலும் தனது தமிழில் தனது முதல் படத்தையும் இயக்கி, பா பாண்டி எனும் வெற்றி படத்தையும் கொடுத்துவிட்டார். அதனை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தை படத்தை பற்றியும் அறிவித்திருந்தார்.
இந்த படத்தில் நாகர்ஜூனா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் என பலர் நடிப்பதாக இருந்தது. இப்படத்தை தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக அறிவித்திருந்தது.
தற்போது தேனான்டாள் பிலிம்ஸ் தற்போது பணப்பிரச்சனையில் உள்ளதால் இப்படத்திற்கான அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் படக்குழு எடுக்கப்படாமல் உள்ளது. ஆதலால் இப்படத்திற்கு வேறு தயாரிப்பாளரை தேடி வருவதாகவும் அதனால் தற்போது இந்த படம் ட்ராப் எனவும் கோலிவுட்டில் தகவல்கள் பரவி வருகின்றன.
ஏற்கனவே தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருந்த பிரமாண்ட படமான சங்கமித்ரா ட்ராப் ஆனது குறிப்பிடதக்கது.
DINASUVADU

Leave a Comment