மறப்போம்… மன்னிப்போம்…என்பதே அதிமுகவின் கொள்கை …! அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

மறப்போம்… மன்னிப்போம்…” என்பதே அதிமுகவின் கொள்கை  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சியிலிருந்து  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தம்பி ஓ.ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியின் கொள்கை கட்டுப்பாடுக்கு எதிராக செயல்பட்டதாக துணை முதல்வர்  ஓபிஸ் தம்பி ஓ.ராஜா அதிமுகவிலிருந்து அதிரடியாக  நீக்கப்பட்டார்.
அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில் , அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாடை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜா  கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளின் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்  துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,ஓ.ராஜா உரிய விளக்கம் அளித்ததால் தான் கட்சியில் மீண்டும் இணைத்துக் கொண்டோம் .அதேபோல்  மறப்போம்… மன்னிப்போம்…” என்பதே அதிமுகவின் கொள்கை ஆகும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்