சிபிஐ அதிரடி முடிவு…!குட்கா வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரிக்க முடிவு….!

Default Image

குட்கா வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ முடிவு  செய்துள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.அதேபோல் குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.
Image result for விஜயபாஸ்கர்
பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இறுதிகெடுவாக சரவணனுக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ.ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாமல் இருந்தார்.
Related image
தொடர்ந்து 2 நாட்களாக  முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும்  அமைச்சர் விஜயபாஸ்கர் மீது 9  மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை நடத்தியது.
அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து சிபிஐ அதிரடி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் குட்கா வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்