ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

Default Image

ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நகர் மற்றும் கிராம ஊரக திட்ட ஆணையராக பதவி வகித்து வரும் பியுலா ராஜேஷ் இந்திய மருத்துவம் மற்றும்  ஹோமியோபதி ஆணையராக இடமாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிஎம்டிஏ முதன்மை செயலாளராக உள்ள ராஜேஷ் லக்கானிக்கு தமிழக அரசின் அடுத்த உத்தரவு வரும்வரை நகர மற்றும் கிராம திட்ட ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இடமாற்றத்திற்கான இந்த உத்தரவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.
இந்த இடமாற்றம் குறித்து தலைமை செயலகத்தில் கசிந்த தகவல்களானது சமீபத்தில் நீதிமன்றத்தில் தொடர்ந்து அவமதிப்பு வழக்களை சந்தித்து வரும் தமிழக அரசால் வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற நீதிபகளே அதிருப்தி தெரிவித்தநர்.மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காத போக்கு சமீப காலமாகவே அதிகரித்து வருவதாககும் கண்டனம் தெரிவித்ததோடு தனது காட்டத்தையும் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நகரமைப்புத் துறை இயக்குனர் பீலா ராஜேஷ் ஜனவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த  நிலையில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்