ஜார்கண்ட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி-பாஜக மீண்டும் தோல்வி…!!

Default Image

ஜார்கண்ட் மாநிலம் கோலேபிரா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கோலேபிரா தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் ஏனாஸ் எக்கா. ஒருவரை கடத்திக் கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கோலேபிரா தொகுதியில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் நமன் பிக்சல் கொங்காரி 9 ஆயிரத்து 658 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பசன்ட் சோரெங்னும் தோல்வியடைந்தார். இதற்கு முன்பு நடந்து இரண்டு இடைத்தேர்தல்களிலும் பாஜக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்