தயாரிப்பாளர் சங்கத்திற்கும், அரசுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது ..!அமைச்சர் கடம்பூர் ராஜூ
தயாரிப்பாளர் சங்கத்திற்கும், அரசுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், அரசுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால்தான் அரசு தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அரசியலில் கால்வைத்து விட்டு மன அழுத்தத்தில் உள்ள கமல் அதனை சரி செய்தால் நல்லது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.