கோலாலம்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…!!

Default Image

கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, சென்னையைச் சேர்ந்த முகமது என்பவர், 15 லட்ச ரூபாய் மதிப்பிலான 480 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் தங்கம் கடத்த உதவிய விமான நிறுவன ஊழியர் முனீர் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்