தென்தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!

Default Image

தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்தமிழகத்தில் இன்றும் , நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்குப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று வரை, 422 புள்ளி 3 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும் என்றும் ஆனால், இதுவரை 329 புள்ளி 5 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்