அடுத்த அதிரடி அரசியல் நகர்வு ..!ரஜினிகாந்த் பெயரில் புதிய டிவி சேனல்…!

Default Image

நடிகர் ரஜினிகாந்த், சார்பாக விரைவில் தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட இருப்பதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
Image result for ரஜினிகாந்த்
வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.
மேலும் அவர் ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் டி.வி. சேனல் துவக்கவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் கூறுகையில்,  ‘‘சூப்பர்ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’  ‘தலைவர் டிவி’ என்ற பெயரில் டிரேட்மார்க் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தனிக்கட்சி துவக்கும் மும்முரத்தில் ரஜினி இருக்கிறார் என்று தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்