மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தி கொள்ளலாம் : மத்திய அரசு
கஜா புயல் நிவாரண நிதிக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு கோரியுள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள ரூ.1277.62 கோடி தொகையை கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மேலும் கஜா புயல் நிவார நித்தியா எவ்வளவு ஒதுக்கலாம் என்பதை மத்திய அரசு 2 வாரங்களில் அறிவிக்கும் என மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.