வாய்மொழி உத்தரவுகளை ஏற்று செயல்படக் கூடாது..!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
வாய்மொழி உத்தரவுகளை ஏற்று செயல்படக் கூடாது என்று காவல்துறைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வாய்மொழி உத்தரவுகளை ஏற்று செயல்படக் கூடாது.அதேபோல் மேகதாது அணை விவகாரத்தில் 10 நாட்களுக்குள், 4 மாநில அரசுகளையும் அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதியளித்துள்ளார் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.