தமிழக அரசின் பாலிதீன் தடை திட்டம் நல்ல திட்டம்தான் – நீதிபதிகள்…!!

Default Image

தமிழக அரசின் பாலிதீன் தடைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்திலிருந்து பாலிதீன் பைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இதை ரத்து செய்யக்கோரி ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், மத்திய அரசின் பாலிதீன் பொருட்கள் சட்டம் 2016-ன் படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், அதனால் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்த, பாலிதீன் தடை திட்டம், நல்ல திட்டம்தான் என்றனர். பாலிதீன் மீதான தடையை நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்