பெய்ட்டி புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!!!
பெய்ட்டி புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி இருந்த பெய்ட்டி புயல் காரணமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஆந்திரா அருகே புயல் கரையை கடந்தது. இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.