பிரதமர் வேட்பாளருக்கான தகுதி உடையவர்தான் ராகுல்காந்தி…!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
பிரதமர் வேட்பாளருக்கான தகுதி உடையவர்தான் ராகுல்காந்தி என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் .ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல் தொடர்பாக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகே பிரதமர் வேட்பாளரை முன்மொழிவது வழக்கம். மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெறும்போது பிரதமர் வேட்பாளர் பற்றி பரிசீலிக்கும் சூழல் வரும். பிரதமர் வேட்பாளருக்கான தகுதி உடையவர்தான் ராகுல்காந்தி என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.