சத்தீஸ்கரிலும் விவசாய கடன் தள்ளுபடி…!!விவசாயிகளின் ஏக்கத்தை நிறைவேற்றும் காங்கிரஸ்..!!

Default Image
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என  அம்மாநில முதல்வராக பதவியேற்க உள்ள பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூரில் நாளேட்டுக்கு பேட்டியளித்த பூபேஷ் பாகல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒட்டு மொத்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்றுத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கூறியிருந்தார் என்று  தெரிவித்த அவர் அதன்படி விவசாயிகளின் வேளாண் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வது தான் எங்களது முதல் முன்னுரிமையாக இருக்கும் என்று பூபேஸ் பாகல் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு  உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விவசாயிகளிடமிருந்தே நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்வது தான் எங்கள் அரசின்  இரண்டாவது முன்னுரிமை என்று அவர் தெரிவித்தார்.இதே போல் மத்திய பிரதேசத்தில்  உள்ள விவசாயிகளின் வேளாண்கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வதே எங்கள் அரசின் முதல் வேலை என்று அம்மாநிலத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள கமல்நாத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்