ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அணி திரள்வார்கள் …! திருமாவளவன்
ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அணி திரள்வார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க முடியும் .ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் அணி திரள்வார்கள்.ஜனநாயகம், அரசமைப்பு சட்டத்தை காக்க பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பது அவசியம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.