செந்தில்பாலாஜி ஒரு வியாபாரி…! எங்கு கிடைக்குமோ அங்கு செல்வார்…! அமைச்சர் கருப்பணன் பகீர் தகவல்

Default Image

செந்தில்பாலாஜி  ஒரு வியாபாரி எங்கு ஆதாயம் கிடைக்குமோ அங்கு செல்வார் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.
நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
Image result for அமைச்சர் கருப்பணன்
இந்நிலையில் இது தொடர்பாக  அமைச்சர் கருப்பணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுப்பது குறித்து முதலமைச்சர் ஆராய்ந்து முடிவெடுப்பார். செந்தில்பாலாஜி அரசியல்வாதி அல்ல, அவா் ஒரு வியாபாரி எங்கு ஆதாயம் கிடைக்குமோ அங்கு செல்வார் என்றும்  அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்